அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.4¼ லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை


அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில்  ரூ.4¼ லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
x

அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.4¼ லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனையானது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, எண்ணமங்கலம், கோவிலூர், வட்டக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1,770 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் கதலி வாழைப்பழம் கிலோ ரூ.50-க்கும், நேந்திரம் ரூ.29-க்கும் விற்பனை ஆனது. பூவன் (தார் ஒன்று) ரூ.620-க்கும், செவ்வாழை ரூ.900-க்கும், ரஸ்தாளி ரூ.750-க்கும், தேன் வாழை ரூ.680-க்கும், மொந்தன் ரூ.300-க்கும், ரொபஸ்டா ரூ.420-க்கும் என மொத்தம் ரூ.4 லட்சத்து 26 ஆயிரத்து 600-க்கு விற்பனை ஆனது. ஈரோடு, பெருந்துறை, பொள்ளாச்சி, திருப்பூர், கோவை, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், ஊட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.

1 More update

Related Tags :
Next Story