அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3½ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்


அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3½ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
x
ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இதற்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, எண்ணமங்கலம், சென்னம்பட்டி, வெள்ளித்திருப்பூர், ஒலகடம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்து 30 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.

இதில் நேந்திரம் கிலோ ஒன்றுக்கு ரூ.20-க்கும், கதலி ரூ.30-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.450-க்கும், செவ்வாழை ரூ.650-க்கும், ரஸ்தாளி ரூ.620-க்கும், மொந்தன் ரூ.200-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 194-க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டன. ஈரோடு, சத்தியமங்கலம், பெருந்துறை, திருப்பூர், கோவை மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாழைத்தார்களை ஏலம் எடுத்து சென்றனர்.


Next Story