ஆதனக்கோட்டையில் ஆசிரியர் மர்ம சாவு


ஆதனக்கோட்டையில் ஆசிரியர் மர்ம சாவு
x

ஆதனக்கோட்டையில் ஆசிரியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

ஆசிரியர்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த குருசடியை சேர்ந்தவர் ஜோததேயூஸ் (வயது 53). இவர், புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் வாடகை வீடு எடுத்து தங்கி கல்லுக்காரன்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

சாவு

இதில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கப்பட வில்லை. இதையடுத்து அவர்கள் இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் ேபரில் அங்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு ஜோததேயூஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து போலீசார் அவரது உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story