சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,180-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,180-க்கு ஏலம்
x

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,180-க்கு ஏலம்

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 4½ டன் பூக்களை எடுத்து வந்திருந்தார்கள்.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,180-க்கும், முல்லைப்பூ ரூ.320-க்கும், காக்கடா ரூ.300-க்கும், செண்டுமல்லி ரூ.41-க்கும், பட்டுப்பூ ரூ.20-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.660-க்கும், அரளி ரூ.60-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.60-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும் ஏலம் போனது.

நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,420-க்கு ஏலம் போனது. நேற்று முன்தினத்தை விட நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.240 குறைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story