சீனாபுரம் சந்தையில்ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனை


சீனாபுரம் சந்தையில்ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனை
x

சீனாபுரம் சந்தையில் ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனையானது.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் மாட்டு சந்தை நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்த நாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர் பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன.

இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 110-ம், இதே இன கிடாரிக்கன்றுகள் 120-ம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. சிந்து மற்றும் ஜெர்சி இன கறவை மாடுகள் 130-ம், இதே இன கிடாரி கன்றுகள் 150-ம் விற்பனைக்கு வந்திருந்தன.

சந்தையில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.53 ஆயிரம் வரை விற்றது. இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது. சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

சீனாபுரம் சந்தையில், கறவை மாடுகள் மற்றும் கிடாரி கன்றுகள் ரூ.1½ கோடிக்கு விற்பனையாகி இருக்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story