ஈரோட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு


ஈரோட்டில்  மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
x

ஈரோட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தாா்.

ஈரோடு

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 36). இவர், ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் தினமும் எடப்பாடியில் இருந்து கருங்கல்பாளையம் வந்து சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் ராஜா பணியில் இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை, உடன் பணிபுரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story