கீழஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுசுகாதார மைய கட்டிடம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை


கீழஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுசுகாதார மைய கட்டிடம்  கட்டுமான பணிக்கு பூமி பூஜை
x
தினத்தந்தி 21 Sep 2023 6:45 PM GMT (Updated: 21 Sep 2023 6:45 PM GMT)

கீழஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுசுகாதார மைய கட்டிடம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15-வது நிதிக்குழு, சுகாதார நிதி ரூ.56.40 லட்சம் மதிப்பீட்டில் வட்டார பொதுச்சுகாதார மைய கட்டிட பணிக்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கீழ ஈரால் ஊராட்சி மன்ற தலைவர் பச்சை பாண்டியன் தலைமை தாங்கினார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிட பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், கோவில்பட்டி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியன், பல் டாக்டர் நாகராஜ், சித்தாடாக்டர் கார்த்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story