தபால் அலுவலகங்களில்தங்க பத்திரம் விற்பனை தொடக்கம்:கோட்ட கண்காணிப்பாளர் தகவல்


தபால் அலுவலகங்களில்தங்க பத்திரம் விற்பனை தொடக்கம்:கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
x
தினத்தந்தி 5 March 2023 6:45 PM GMT (Updated: 5 March 2023 6:46 PM GMT)

தபால் அலுவலகங்களில் தங்க பத்திரம் விற்பனை தொடக்கப்பட உள்ளதாக தேனி கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தேனி

தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசு தங்க பத்திரம் திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. அதன்படி தேனி கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை தபால் அலுவலகங்கள், துணை தபால் அலுவலகங்களில் தங்க பத்திரம் விற்பனை இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 10-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது. ஒரு தனிநபர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை தங்க பத்திரம் வாங்கலாம். ஒரு கிராம் விலையாக ரூ.5,611 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத ஆண்டு வட்டி, 6 மாதத்துக்கு ஒரு முறை வழங்கப்படும். மேலும் 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் மதிப்புக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story