ரெயில் நிலையத்தில் வாலிபர் மர்மசாவு


ரெயில் நிலையத்தில் வாலிபர் மர்மசாவு
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 10 Jan 2023 6:45 PM GMT)

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் வாலிபர் மர்மசாவு போலீசார் விசாரணை

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் ரெயில் நிலைய வளாகத்தில் குருசாமி பிள்ளை தெரு அருகே உள்ள ரெயில்வே நடைமேடையில் 35-வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்த அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story