விவசாயி உள்பட 3 பேர் மீது தாக்குதல்


விவசாயி உள்பட 3 பேர் மீது தாக்குதல்
x

துக்க வீட்டில் ஏற்பட்ட தகராறில் விவசாயி உள்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 37). விவசாயி. அவருடைய உறவினர் ஒருவர், கடந்த 4 தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அங்கு துக்கம் விசாரிக்க வந்த நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையை சேர்ந்த குமரேசன், மணிவேல், ரத்தினம் ஆகியோர் தகராறு செய்ததாக தெரிகிறது.

அப்போது மூர்த்தி, சூரியபிரகாஷ், பாலமுருகன் ஆகியோரை அவர்கள் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த மூர்த்திக்கு, நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் மூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

1 More update

Next Story