தனியார் நிதி நிறுவன மேலாளர் மீது தாக்குதல்


தனியார் நிதி நிறுவன மேலாளர் மீது தாக்குதல்
x

விழுப்புரம் அருகே தனியார் நிதி நிறுவன மேலாளரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள பிடாகத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 26). இவர் வளவனூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் திருப்பாச்சனூரை சேர்ந்த மஞ்சுளா, ராதா ஆகியோர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தலா ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் வாங்கிய கடனுக்கு 6 மாதம் தவணை தொகை செலுத்தினர். 7-வது மாத தவணை தொகையை சதீஷ்குமார், வசூல் செய்ய சென்றபோது அழகேசன், மஞ்சுளா, ராதா, மணிகண்டன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சதீஷ்குமாரிடம் தகராறு செய்து அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சதீஷ்குமாரின் அண்ணன் கலைவாணன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அழகேசன் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story