தொழிலாளி மீது தாக்குதல்

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளத்தைச் சேர்ந்த குமார்பாணடி மகன் ஐயப்பன் (வயது 40). தொழிலாளி. இவருக்கும், சகோதரர் ஆயிரம் என்பவருக்கும் சொத்து தகராறு காரணமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் சம்வத்தன்று இதுதொடர்பாக மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆயிரம், அவரது மனைவி பேச்சியம்மாள், மகன் மந்திரமூர்த்தி ஆகியோர் சேர்ந்து ஐயப்பனை தாக்கினார்களாம். இதில் காயமடைந்த ஐயப்பன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெத்தினராஜ் வழக்குபதிவு செய்து ஆயிரம் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்.
Related Tags :
Next Story






