வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி


வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி
x

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடைபெற்றது.

திருவரங்குளம் தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 45). இவரது வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டு இருந்தார். அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டதால் வீடு பூட்டிக் கிடந்தது. இதனை அறிந்த மர்ம ஆசாமி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் ஏதேனும் நகை, பணம் இருக்கிறதா? என்று பார்த்துள்ளார். ஆனால் எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து ஏமாற்றத்துடன் சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story