திருவள்ளூரில் சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவுக்கு கடத்த முயற்சி - 3 பேர் கைது

சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சந்தன வேணுகோபாலபுரம் ஊராட்சியில் உள்ள காப்பு காட்டில், சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவிற்கு கடத்த முயற்சித்த கணேசன், ரவி, ஏழுமலை ஆகிய 3 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 10 கிலோ சந்தன மரம், கத்தி, மற்றும் ரம்பம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் தப்பியோடிய ராசுக்குட்டி என்பவரை தேடி வருவதாக திருத்தணி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





