"ஆகஸ்ட் 3 சென்னையில் ஆசிய ஆக்கி போட்டி" - அமைச்சர் உதயநிதி அதிரடி அறிவிப்பு


ஆகஸ்ட் 3  சென்னையில் ஆசிய ஆக்கி போட்டி - அமைச்சர் உதயநிதி அதிரடி அறிவிப்பு
x

16 வருடங்களுக்கு பிறகு சென்னையில் ஆசிய ஆக்கி போட்டி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சர்வதேச ஆக்கி போட்டி நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில், இந்த முறை வரவிருக்கும் 'ஆசிய ஆக்கி போட்டி' சென்னையில் நடைபெற இருக்கிறது. சென்னையில் 2007-க்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து ஆசிய ஆக்கி போட்டி நடைபெறவுள்ளதாக உதயநிதி அறிவித்துள்ளார். சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில், ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ஆசிய ஆக்கி போட்டி நடைபெறும்.

இந்த போட்டியில் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அணியினர் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த போட்டியில் மாபெரும் வெற்றியடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து உதவிகளையும் வழங்க இருக்கிறார்.


Next Story