காதல் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்; ஆட்டோ டிரைவர் தற்கொலை


காதல் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்;  ஆட்டோ டிரைவர் தற்கொலை
x

எருமப்பட்டி அருகே காதல் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால், ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

எருமப்பட்டி

கல்லூரி காதல்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் அன்னபூரணி (வயது 40) இவருடைய மகன் விமல்குமார் (21). ஆட்டோ டிரைவர். இவர் அரசு கல்லூரியில் படித்தபோது தர்மபுரியை சேர்ந்த சுமலதா என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் அவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சுமலதாவுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது அவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர் அடிக்கடி கள்ளக்காதலனுடன் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த விமல்குமார், தனது மனைவி சுமலதாவை கண்டித்துள்ளார். இதனால் விமல்குமாருக்கும், சுமலதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தற்கொலை

இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பு விமல்குமாருடன் வாழ பிடிக்காமல் சுமலதா கள்ளக்காதலனை திருமணம் செய்து கொண்டு, அவருடன் சென்று விட்டதாக ெதரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்த விமல்குமார் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் தற்கொலை செய்துகொண்ட விமல்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

காதல் மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story