அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - முதல்சுற்று நிறைவு


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - முதல்சுற்று நிறைவு
x
தினத்தந்தி 15 Jan 2023 3:59 AM GMT (Updated: 15 Jan 2023 5:24 AM GMT)

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அவனியாபுரம்,


பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.


320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள். ஆயிரம் காளைகள் வாடிவாசலில் சீறி வர இருக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.


இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் முதல்சுற்று நிறைவு பெற்றுள்ளது. முதல் சுற்றில் 61 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. 4 காளைகளை அடக்கி ரஞ்சித் என்ற இளைஞர் முன்னிலையில் உள்ளார். இதுவரை 8 பேர் காயமடைந்துள்ளனர். 2ம் சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.



Next Story