ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஹெல்மெட் விழிப்புணர்வு


ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு  ஹெல்மெட் விழிப்புணர்வு
x

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆலோசனைளை வழங்கினர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மேட் அணியாமல் செல்கின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் அனைத்து போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மேட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒரு முறை மட்டும் ஹெல்மேட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அனுமதி வழங்கி அடுத்த முறை வரும் போது கட்டாயம் வழக்கு பதியப்படும் என அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் மேற்பார்வையில் திருத்தணி சட்டம்-ஓழுங்கு சப்இன்ஸ்பெக்டர்கள் ராக்கிகுமாரி, பூபாலன் நேற்று திருத்தணி-அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, முருகன் கோவில் மலைப்பாதை அருகே வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி ஹெல்மேட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆலோசனைளை வழங்கினர்.


Next Story