மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்


மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 18 July 2023 12:30 AM IST (Updated: 18 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தென்காசி

தென்காசி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப் பொருட்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த தெருமுனை பிரசாரம் நேற்று தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை தென்காசி கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேற்று புதிய பஸ் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story