தூய்மைப்பணி குறித்து விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்


தூய்மைப்பணி குறித்து விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
x

திட்டச்சேரியில் தூய்மைப்பணி குறித்து விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திட்டச்சேரி பேரூராட்சி சார்பில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா தலைமை தாங்கினார்.பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார்.இதில் பொதுமக்களுக்கு ஸ்வச்சதா செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது, குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.இந்த பேரணி பேரூராட்சி வளாகத்தில் தொடங்கி திட்டச்சேரி கடைத்தெரு, பஸ் நிலையம், கொந்தகை கடைத்தெரு வரை சென்று மீண்டும் பேரூராட்சி வளாகத்தில் முடிவடைந்தது.அதை தொடர்ந்து அனைத்து தெருக்களிலும் ஒட்டுமொத்த தூய்மைப்பணிமேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளுக்கு திடக்கழிவை உரமாக்குதல் குறித்து, உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், வரி தண்டலர்ஜெகவீரபாண்டியன், அலுவலக உதவியாளர் மாதவன், அமானுல்லா, அண்ணாதுரை, பேரூராட்சி மன்ற துணை தலைவர், மன்ற உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story