பட்டாசு விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்


பட்டாசு விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:45 PM GMT)

சீர்காழியில் பட்டாசு விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் பட்டாசு விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமை தாங்கினார். சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு பேசுகையில், கடையின் உரிமம்,வெடி இருப்பு பதிவேடு ஆகியவற்றை கடை உரிமையாளர்கள் சரியாக பராமரிக்கவேண்டும், உரிமத்தில் குறிப்பிட்டுள்ள அளவில் மட்டுமே பட்டாசு வைத்திருக்கவேண்டும், எளிதில் தீ பற்றக்கூடிய எந்த பொருளையும் வைத்திருக்ககூடாது, பட்டாசு கடைகளில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கண்டிப்பாக காப்பீடு செய்திருக்கவேண்டும்,பழைய பட்டாசுகளை வைத்திருந்து விற்பனை செய்யக்கூடாது என்று கூறினார். இதில் சீர்காழி,தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story