அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்


அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்
x

அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

நாகப்பட்டினம்

நாகையில் பொது போக்குவரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகைமாலி எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை அவுரித்திடலில் தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தது. சாலை விபத்துக்களை தடுக்க வேண்டும். சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும். பொது போக்குவரத்தை பாதுகாக்க வேண்டும். பூமி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் ஆகிய விழிப்புணர்வு அடங்கிய வாசங்களை ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் கையில் ஏந்தி சென்றனர். இதில் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.டி.அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொருளாளர் வைத்தியநாதன் நன்றி கூறினார்.


Next Story