அரசு கலை கல்லூரியில் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


அரசு கலை கல்லூரியில் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

சோளிங்கரில் அரசு கலை கல்லூரியில் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் நிதி நிறுவன மோசடி, போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி, போலி கடன் செயலி மற்றும் சைபர் கிரைம் உதவி எண்: 1930, www.cybercrime.gov.in இணையதள முகவரி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்தல் குறித்தும், சரியான தொடுதல் மற்றும் தவறான தொடுதல் பற்றியும் அவ்வாறு நடைபெற்றால் யாரை அணுகவேண்டும் என்ற விவரமும், அதற்காக எந்த எந்த அலுவலகங்கள் மற்றும் குழுக்கள் செயல்படுகின்றன என்ற விவரமும் மற்றும் அந்த சமயத்தில் அணுக வேண்டிய உதவி இலவச உதவி எண் 1098 / 181 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், விஜயலட்சுமி, அரசு கல்லூரி கணித துறை தலைவர் சுஜாதா, வணிகவியல் துறை தலைவர் உதயகுமார், தமிழ் துறை தலைவர் சேகர், உதவி விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story