செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு பேரணி


செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு பேரணி
x

தேசிய கண்தான இரு வார விழாவையொட்டி செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கண் மருத்துவத்துறை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

செங்கல்பட்டு

இதனை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கர், கண் மருத்துவ துறைதலைவர் சுமதி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் முத்துக்குமார். நிலைய மருத்துவ அலுவலர் ரம்யா, கண் மருத்துவத்துறை இணை பேராசிரியர் வசுமதி மற்றும் உதவி பேராசிரியர்கள் கவிதா, ஸ்ரீனிவாசன், ஸ்ரீனிவாசன், அபிராமி மற்றும் முதுநிலை டாக்டர்கள், மருத்துவ மற்றும் ஆப்டோமெட்ரி மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவின் சிறப்பு அம்சமாக கண் தானம் செய்தவர்களின் உறவினர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கோலப்போட்டி, பேச்சுப்போட்டி வாயிலாகவும் பொதுமக்களுக்கு சிறு நாடகங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகள் வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு கண் தானம் பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசினார்.


Next Story