சாலை பாதுகாப்பு குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு


சாலை பாதுகாப்பு குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
x

சாலை பாதுகாப்பு குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நடந்தது.

கரூர்

லாலாபேட்டைபகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி லாலாபேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், டிரைவர்கள் ஆட்டோ ஓட்டும் போது அதற்கான ஆவணங்களை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும், சாலையில் செல்லும்போது சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், ஆட்டோ ஓட்டும்போது அதற்கான சீருடையை அணிந்திருக்க வேண்டும், மதுபோதையில் ஆட்டோக்களை ஓட்டக்கூடாது. ஆட்டோக்களை முறையாக பராமரித்து நல்ல முறையில் இயக்க வேண்டும், பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும், என்றார். இதில், ஆட்ேடா டிரைவர்கள், போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story