லாரி டிரைவருக்கு பிடிவாரண்டு


லாரி டிரைவருக்கு பிடிவாரண்டு
x

பாலியல் வழக்கில் ஆஜராகாத லாரி டிரைவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து சிவகங்கை மகிளா கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை,

காரைக்குடியை அடுத்துள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32). லாரி டிரைவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 80 வயது மூதாட்டியின் வாயில் துணியை கட்டி பாலியல் தொந்தரவு செய்தாராம். இது தொடர்பாக காரைக்குடி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் விஜயகுமாரை கைது செய்தனர். அவர் மீது சிவகங்கையில் உள்ள மகிளா சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்ட லாரி டிரைவர் விஜயகுமார் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மகிளா நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story