விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா:சேலம் ராஜகணபதிக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்திரளான பக்தர்கள் தரிசனம்


விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா:சேலம் ராஜகணபதிக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்திரளான பக்தர்கள் தரிசனம்
x

விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவையொட்டி சேலம் ராஜகணபதிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

சேலம்

சேலம்

விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவையொட்டி சேலம் ராஜகணபதிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

ராஜகணபதி கோவில்

சேலம் ராஜகணபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும்.

அதன்படி இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து ராஜகணபதிக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 10-வது நாளான நேற்று விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

1,008 லிட்டர் பாலாபிஷேகம்

அதன்படி நேற்று ராஜகணபதிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று காலை ராஜகணபதிக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து இளநீர், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ராஜகணபதிக்கு பட்டாடை உடுத்தப்பட்டது.

பின்னர் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து வேதங்கள் முழங்க பூக்களால் லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க ராஜகணபதிக்கு மகாதீபாராதனை நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

1 More update

Next Story