சந்தான மாரியம்மன் கோவிலில் பால்காவடி திருவிழா


சந்தான மாரியம்மன் கோவிலில் பால்காவடி திருவிழா
x
தினத்தந்தி 29 May 2023 6:45 PM GMT (Updated: 29 May 2023 6:45 PM GMT)

சந்தான மாரியம்மன் கோவிலில் பால்காவடி திருவிழா

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே மல்லியம் கீழத்தெருவில் சந்தான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் வைகாசி மாதத்தில் நடக்கும் பால்காவடி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 9 நாட்களுக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நாளான பால்காவடி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக மல்லியம் காவிரிக்கரையில் இருந்து திரளான பக்தர்கள் கரகம், பால்குடம், காவடி எடுத்துக்ெகாண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர். மேலும் நேற்று அம்மன் வீதி உலா நடந்தது.


Next Story