செல்வமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்


செல்வமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
x

செல்வமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் ஆலம்பாடியில் பிரசித்தி பெற்ற செல்வமாரியம்மன், விநாயகர், நாகக்கன்னி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிமாத திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story