பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை


பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை
x

நெல்லை மாநகர பகுதியில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகர போலீஸ் சட்டம்-1997 பிரிவு 41 (2) என்ற உத்தரவு நெல்லை, சேலம், திருச்சி மாநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன்படி நெல்லை மாநகர பகுதியில் நேற்று முதல் வருகிற 12-ந் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது அமைதி, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story