பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை

நெல்லை மாநகர பகுதியில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகர போலீஸ் சட்டம்-1997 பிரிவு 41 (2) என்ற உத்தரவு நெல்லை, சேலம், திருச்சி மாநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன்படி நெல்லை மாநகர பகுதியில் நேற்று முதல் வருகிற 12-ந் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொது அமைதி, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





