மஞ்சள் நிற உருண்டையான விளக்குகளை விற்பனை செய்ய தடை; கலெக்டர் எச்சரிக்கை


மஞ்சள் நிற உருண்டையான விளக்குகளை விற்பனை செய்ய தடை; கலெக்டர் எச்சரிக்கை
x

அருணாசலேஸ்வரர் கோவிலில் பஞ்சினால் செய்யப்பட்டு நெய் தடவிய மஞ்சள் நிற உருண்டையான விளக்குகளை விற்பனை செய்ய கலெக்டர் முருகேஷ் தடை விதித்துள்ளார்.

திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோவிலில் பஞ்சினால் செய்யப்பட்டு நெய் தடவிய மஞ்சள் நிற உருண்டையான விளக்குகளை விற்பனை செய்ய கலெக்டர் முருகேஷ் தடை விதித்துள்ளார்.

அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர்.

பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் திருவிழா போன்ற நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அருகே 365 நாட்கள் பலன் கொண்டது என தெரிவித்து பஞ்சினால் செய்யப்பட்டு மேற்புறம் நெய் தடவிய மஞ்சள் நிற உருண்டையான விளக்கு விற்பனை செய்யப்பட்டு கோவில் அருகில் ஏற்றப்படுகிறது.

இந்த விளக்கு எளிதில் அணையாமல் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்துவதுடன் எளிதில் தீ விபத்தினை ஏற்படுத்தும் வாய்ப்பினை கொண்டதாகும்.

உருண்டையான விளக்கு விற்க தடை

எனவே, மஞ்சள் நிற உருண்டையான விளக்கினை விற்பனை செய்யவும், கோவில் அருகே ஏற்றவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விளக்கினை விற்பனை செய்யும் கடைகள் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும் விளக்கு ஏற்றுபவருக்கு அபராதம் விதிக்கப்படும்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story