முதல்-அமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி


முதல்-அமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி
x

நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நடத்தப்பட்டது.

இதில் எஸ்.பி.கே. பள்ளி, சங்கர் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வெற்றிவிகாஸ் பள்ளி, ஸ்பெக்ட்ரம் அகாடமி, கொங்குநாடு பள்ளி உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். இந்த போட்டியில் வெற்றிபெறும் முதல் 3 அணிகளுக்கு பரிசு வழங்கப்படும் எனவும், சிறந்த வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் நேற்று கபடி, கால்பந்து, சிலம்பம், நீச்சல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story