கீழ்பவானி பாசன கால்வாயில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு


கீழ்பவானி பாசன கால்வாயில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு
x
திருப்பூர்


முத்தூர் அருகே காந்திநகர் கிராமத்தில் கீழ்பவானி பாசன கால்வாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளால் சீரான நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்படி முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் நெல் நாற்று நடவுப்பணிகள் முடிவடைந்து நன்கு செழித்து வளர்ந்துள்ள நெல் பயிர்களுக்கு அடி உரம் இடும் மேலாண்மை பணிகள் தொடங்கப்பட்டு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திருவாச்சி ஊராட்சிக்குட்பட்ட பாலப்பாளையம் கிராமத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கீழ்பவானி பாசன பிரதான கால்வாயில் திடீரென்று எதிர்பாராத விதமாக உடைப்பு ஏற்பட்டது. இதனால் அணையில் இருந்து கீழ்பவானி பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

முத்தூர்-காங்கயம் பிரதான சாலை ரங்கப்பையன்காடு பஸ் நிறுத்தம் மேல்புறம் அருகில் பிரிந்து புதுப்பாளையம் பிரிவு வரை செல்லும் கிராம சாலையின் குறுக்கே காந்திநகர் கிராமம் அருகே செல்லும் கீழ்பவானி பாசன கால்வாயில் மேல்புறம் ஆகாயத்தாமரைகள் நீண்ட தூரத்திற்கு நன்கு வளர்ந்து ஒரு கரையை தொட்டபடி அடர்ந்து பச்சை, பசேலென்று காட்சியளித்து படர்ந்து ஆக்கிரமித்து உள்ளன. இதனால் இப்பகுதியில் கீழ்பவானி பாசன கால்வாயில் செல்லும் சீரான நீரோட்டம் தடைபட்டு உள்ளது.

துரித நடவடிக்கை

இந்த ஆகாயத்தாமரைகள் படர்ந்து உள்ள கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் தண்ணீர் திறந்து விடப்படும் போது சீரான நீரோட்டம் தடைபட்டு அப்பகுதியில் தேங்கி கால்கீழ்பவானி பாசன கால்வாயில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்புகீழ்பவானி பாசன கால்வாயில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்புவாயின் மேலே ஏறி வீணாகி தொடர்ந்து செல்லும் தண்ணீர் சீராக செல்லாமல் மெதுவாக செல்லும் அபாய சூழ்நிலை நிலவி வருகிறது. இப்பகுதியில் ஆகாயத்தாமரைகள் சீரான நீரோட்டத்தை தடுப்பதால் மழைக்காலங்களில் கால்வாயில் அதிக அளவு நீர் செல்லும் போது நீர் மேலே எழும்பி அப்பகுதியில் வெளியேறி வீணாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் காந்திநகர் கிராம பகுதியில் கீழ்பவானி பாசன கால்வாயில் மேல்புறம் நீண்ட தூரத்திற்கு வளர்ந்து படர்ந்து ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரான முறையில் கால்வாயில் தண்ணீர் தொடர்ந்து செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story