மனைவி பிரிந்து சென்றதால்தொழிலாளி தீக்குளிப்பு


மனைவி பிரிந்து சென்றதால்தொழிலாளி தீக்குளிப்பு
x
தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

தேனி

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி காந்தாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 37). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுருதிகாதேவி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக சுருதிகாதேவி குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் செல்வம் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து செல்வத்தை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவருடைய தாய் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story