பெங்களூரு-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பெங்களூரு-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

கோப்புப்படம்

பெங்களூரு-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெங்களூரு-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

* பெங்களூரு-சென்னை எழும்பூர் இடையே (வண்டி எண்: 06519) இன்று மற்றும் நாளை காலை 6.50 மணிக்கு பெங்களூருவில் இருந்து இயக்கப்படுகிறது.

* சென்னை எழும்பூர்-பெங்களூரு இடையே (06520) இன்று மற்றும் நாளை மாலை 3.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story