குலசேகரநாதர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி

குலசேகரநாதர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி பத்ரதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு மகா கணபதி ஹோமம், மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம், சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன. மாலையில் கோவில் உள் வளாகத்தில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது. இதில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதி பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர். இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு ரதவீதிகளிலும் உலா வந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





