தொடர்ந்து 36 நாட்களாக 102 அடி நீர்மட்டத்தில் நீடிக்கும் பவானிசாகர் அணை


தொடர்ந்து 36 நாட்களாக 102 அடி நீர்மட்டத்தில்  நீடிக்கும் பவானிசாகர் அணை
x

தொடர்ந்து 36 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் நீடிக்கிறது.

ஈரோடு

பவானிசாகர்

தொடர்ந்து 36 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் நீடிக்கிறது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. இதன் நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து ஆதாரங்களாக உள்ளன.

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பாசனத்துக்காக தண்ணீர்...

நீலகிரி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த மாதம் 5-ம் தேதி காலை 9 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது.

இதையடுத்து கடந்த மாதம் 12-ந் தேதி முன்கூட்டியே பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதேசமயம் நீலகிரி மலைப்பகுதியில் பருவமழையின் தாக்கம் குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீர் அளவும் குறைந்தது.

102 அடியாக நீடிப்பு

தற்போது தொடர்ந்து 36-வது நாளாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாகவே நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று பகல் 2 மணியளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு ஆயிரத்து 2 ஆயிரத்து 650 கன அடி தண்ணீரும் கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 1,750 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.


Next Story