தொடர்ந்து அதிகரிப்பு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 9,300 கனஅடி தண்ணீர் வருகிறது


தொடர்ந்து அதிகரிப்பு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு  9,300 கனஅடி தண்ணீர் வருகிறது
x

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 300 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 300 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணை

தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை, தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாகவும் திகழ்வது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பவானி ஆற்றின் மூலம் திறக்கப்படும் தண்ணீரால் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசனப்பகுதிகளை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.

அதேபோல் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. இது தவிர பவானிசாகர் அணையில் நீர்மின் உற்பத்தியும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

நீர்வரத்து அதிகரிப்பு

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் வந்தது. பவானி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரத்து 850 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு ஆயிரத்து 750 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு ெதாடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 550 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,750 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 5-ந் தேதி காலை 9 மணி முதல் தொடர்ந்து 102 அடியாக நீடிக்கிறது.


Next Story