நீலகிரியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


நீலகிரியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x

நீலகிரியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

ஈரோடு

பவானிசாகர்

நீலகிரியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

பவானிசாகர் அணை

பவானி ஆறும், மோயாறும் கலக்கும் இடத்தில் பவானிசாகர் அணை அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்ட இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும்.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

நீர் வரத்து குறைந்தது

அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை குறைந்து வருவதால் நீர் வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து பவானி ஆற்றில் வழியாக திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 900 கன அடியாக இருந்தது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரும் வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீராக குறைக்கப்பட்டது. கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


Next Story