சங்கரன்கோவிலில் பூலித்தேவன் பிறந்தநாள் விழா

சங்கரன்கோவிலில் பூலித்தேவன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட பூலித்தேவன் உருவப்படத்துக்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் முத்துராமலிங்கம், ஓய்வு பெற்ற தாசில்தார் சூரிய நாராயண மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





