பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா

திருமயம் அருகே பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைெபற்றது.
மீன்பிடி திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மஞ்சினிப்பட்டி கிராமத்தில் பெரியகண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் கோடை காலத்தில் நடைபெறும் ஊத்தா குத்துதல் எனப்படும் மீன்பிடித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று இந்த வருடம் இன்று காலை ஊத்தா குத்து மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
இதில் நத்தம், பூலாம்குறிச்சி, பொன்னமராவதி, மணப்பாறை, திண்டுக்கல், திருமயம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 400 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
சாப்பிட்டு மகிழ்ந்தனர்
இதில் ஒரே நேரத்தில் கண்மாயில் பொதுமக்கள் இறங்கி போட்டிப்போட்டு கொண்டு ஊத்தாவை வைத்து மீன் பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, விரால், கெண்டை, கெளுத்தி, ஜிலேபி ஆகிய மீன்கள் கிடைத்தது.
இதையடுத்து தங்களுக்கு கிடைத்த மீன்களை இளைஞர்கள் ஆர்வமுடன் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அந்த மீன்களை சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.