சிறைக்காவலர்களுக்கு பிறந்த நாள் கேக் வழங்கும் திட்டம்-மதுரை மத்திய சிறையில் அமல்படுத்தப்பட்டது


சிறைக்காவலர்களுக்கு பிறந்த நாள் கேக் வழங்கும் திட்டம்-மதுரை மத்திய சிறையில் அமல்படுத்தப்பட்டது
x

சிறைக்காவலர்களுக்கு பிறந்த நாள் கேக் வழங்கும் திட்டம் மதுரை மத்திய சிறையில் அமல்படுத்தப்பட்டது

மதுரை


தமிழக சிறைத்துறை இயக்குனராக அமரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறைத் துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சிறைக்காவலர்களின் நலனிலும் கவனம் செலுத்தும் விதமாக அனைத்து மத்திய சிறைகளிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள சிறைக்காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக சிறைக்காவலர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு பிறந்த நாள் கேக் மற்றும் சிறைத்துறை இயக்குனரின் வாழ்த்து அட்டை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யுமாறு அனைத்து சிறைக் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தமிழ் புத்தாண்டான நேற்றுமுதல் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. இதனையொட்டி மதுரை சரகத்தில் நேற்று பிறந்த நாள் காணும் காவலர்களுக்கு சிறைத்துறை மதுரை சரக டி.ஐ.ஜி. பழனி, கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் பாளையங்கோட்டை மத்திய சிறையைச் சார்ந்த 4 காவலர்களுக்கும் இணைய வழியில் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.


Next Story