பா.ஜ.க. கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு


பா.ஜ.க. கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 20 March 2024 11:37 AM GMT (Updated: 20 March 2024 12:02 PM GMT)

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஜான் பாண்டியன் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் அடுத்த மாதம் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க., ஓ.பன்னீர் செல்வம் அணி, டி.டி.வி . தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பெஸ்ட் ராமசாமியின் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இதனிடையே பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஜான் பாண்டியன் இடையே தமிழக பா.ஜ.க. தலைமையகத்தில் இன்று கையெழுத்தானது.


Next Story