போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க., பா.ம.க.வினர் கைது

ஆம்பூரில் மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க., பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள மதுபான கடையை அகற்றக்கோரி நேற்று பா.ஜ.க., பா.ம.க., இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி முற்றுகையிட முயன்றவர்களை கைது செய்து அருகே உள்ள மண்டபத்தில் வைத்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





