ராமேசுவரம் விசைப்படகு விடுவிப்பு


ராமேசுவரம் விசைப்படகு விடுவிப்பு
x

ராமேசுவரம் விசைப்படகு விடுவிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 5-ந் தேதி அன்று கிறிஸ்டோபர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் 7 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவ்வாறு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மற்றும் படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டு ராமேசுவரம் வந்தனர். ஆனால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் படகு விடுவிக்கப்படவில்லை.

இதுகுறித்து ராமேசுவரத்தை சேர்ந்த படகு உரிமையாளர் கிறிஸ்டோபர் இலங்கையில் வக்கீல் ஒருவரை ஏற்பாடு செய்து என்ஜின் பழுதானதால் திசை மாறி வந்ததாக படகை விடுவிக்க மனு செய்து மன்னார் கோர்ட்டில் வாதாடி வந்தார். இந்தநிலையில் படகு என்ஜின் பழுது உறுதி செய்யப்பட்டதைத்தொடர்ந்து மன்னார் கோர்ட்டு ராமேசுவரத்தை சேர்ந்த கிறிஸ்டோபருக்கு சொந்தமான படகை நேற்று விடுவித்தது உத்தரவிட்டது. முதல் முறையாக மீனவர் ஒருவர் சொந்தமாக வக்கீல் வைத்து வாதாடி மீன்பிடி படகை இலங்கை கோர்ட்டு விடுவித்துள்ளது படகு உரிமையாளர் மற்றும் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விடுதலை செய்யப்பட்ட இந்த விசைப் படகு அரசு அனுமதியுடன் விரைவில் ராமேசுவரத்திற்கு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.


Next Story