லாலாபேட்டையில் படகு போட்டி


லாலாபேட்டையில் படகு போட்டி
x

லாலாபேட்டையில், படகு போட்டி நடந்தது.

கரூர்

லாலாபேட்டை பகுதியில் மீனவர் சங்கம் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பொங்கலை பண்டிகையை முன்னிட்டு படகுபோட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டி லாலாபேட்டை வழியாக செல்லும் தென்கரை வாய்க்காலில் நடந்தது. இதில் ஒரு படகிற்கு 2 பேர் வீதம் துடுப்பு போட வசதியாக இருந்தனர். இதில் மொத்தம் 9 படகுகளில் மொத்தம் 18 பேர் இருந்தனர். இதையடுத்து 9 படகுகளும் தண்ணீர் செல்லும் எதிர்திசையில் சீறிப்பாய்ந்து சென்று திரும்பி வந்து இலக்கை அடைந்தது. இதில் சக்திவேல்- அண்ட் சக்திவேல் முதலிடத்தையும், சங்கர்-பாஸ்கர் 2-வது இடமும், ரமேஷ்குமார்-சக்திவேல் 3-வது இடத்தையும் பெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

1 More update

Related Tags :
Next Story