பெரிய ஏரியில் வாலிபர் பிணம்


பெரிய ஏரியில் வாலிபர் பிணம்
x

மேல்மலையனூர் பெரிய ஏரியில் வாலிபர் பிணம் யார் அவர் போலீசார் விசாரணை

விழுப்புரம்

திண்டிவனம்

மேல்மலையனூர் பெரிய ஏரியில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலர் நரேந்திரன் வளத்தி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்றும் அவர் குளிக்கும்போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலையா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story