ரெயில் தண்டவாளம் அருகே கை துண்டான நிலையில் ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம் மீட்பு - கொலை செய்யப்பட்டாரா?


ரெயில் தண்டவாளம் அருகே கை துண்டான நிலையில் ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம் மீட்பு - கொலை செய்யப்பட்டாரா?
x

எர்ணாவூரில் ரெயில் தண்டவாளம் அருகே கை துண்டான நிலையில் உடலில் ரத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை

சென்னை எர்ணாவூர் 'லிப்ட் கேட்' அருகே ரெயில் தண்டவாளத்தின் அருகில் வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில், உடலில் காயங்களுடன் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு ரெயில் தண்டவாளம் அருகே வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது வலது கால் மற்றும் உடலின் பல இடங்களில் ரத்த காயங்கள் காணப்பட்டது. போலீசார், வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்த வாலிபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

அவர் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது ரெயிலில் அடிபட்டு கை துண்டாகி, உடலில் காயங்கள் ஏற்பட்டு இறந்தாரா? அல்லது யாராவது அவரை கொடூரமாக வெட்டிக்கொன்று விட்டு உடலை தண்டவாளம் ஓரமாக வீசி சென்றனரா? என்ற கோணத்தில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story