தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்


தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x

அரக்கோணத்தில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் - சென்னை ரெயில் மார்கத்தில் செஞ்சிபனப்பாக்கம் - கடம்பத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்டவாளம் அருகே கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து இறந்த நபர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story