தர்மபுரியில்சிறுமியை கடத்தி திருமணம்; மெக்கானிக் போக்சோவில் கைது


தர்மபுரியில்சிறுமியை கடத்தி திருமணம்; மெக்கானிக் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 23 March 2023 7:00 PM GMT (Updated: 23 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). மெக்கானிக். இவர் 15 வயது சிறுமியை கடத்தி சென்று குழந்தை திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரி அருகே ஒரு வீட்டில் கார்த்திக் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதை தொடர்ந்து அந்த சிறுமி மீட்கப்பட்டார். இதுதொடர்பாக போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் நேற்று கார்த்திக்கை கைது செய்தனர்.


Next Story